நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு 3 நாட்கள் விடுமுறை – அரசின் சூப்பரான அறிவிப்பு!
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கென்று பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் அரசு வேலை பார்க்கும் பெண்களுக்காக புதிய விடுமுறையை அறிவித்துள்ளது.
பெண்கள் கவனத்திற்கு:
ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பணிச்சுமை குறைக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தற்போது பெரும்பாலான நாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்கள் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தாய்மார்களுக்கு பேருதவியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் அரசு பெண்களுக்காக புதிய விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது, பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படும் தருணத்தில் அவர்கள் மிகவும் சிரமப்படாமல் இருக்க 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்கும் முதல் நாடு என்ற பெருமை ஸ்பெயின் நாட்டையே சாரும்.
தமிழகத்தில் அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிரடியாக உயரும் கறிக்கோழி, முட்டை விலை!
அத்துடன் இது போன்ற அறிவிப்பை பிற நாடுகளும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மிகவும் மாற்றமடைந்துள்ளதால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு வேலை நாளில் இருந்து விடுமுறை கிடைத்தால் உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் ஓய்வெடுக்க உதவியாக இருக்கும். இது போன்ற விடுமுறை அறிவிப்பை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அறிவிக்க முன்வர வேண்டும்.