தமிழகத்தில் அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிரடியாக உயரும் கறிக்கோழி, முட்டை விலை!
தமிழகத்தில், நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி, முட்டை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உயரும் கறிக்கோழி, முட்டை விலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முட்டை , கறிக்கோழி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால், பண்ணையிலேயே கோழி குஞ்சுகள் இறந்துவிடுகின்றன. மேலும், கோழித்தீவனம் விலை உயர்வு, போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயர்வு காரணமாக சிக்கன் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிலோவுக்கு 12 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது கறிக்கோழி விலை கிலோ 127 ரூபாய் ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முட்டைக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ ரூபாய் 75-க்கு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல், கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு சூப்பர் அறிவிப்பு – டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
இந்நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பிற மண்டலங்களில் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும், மக்களிடையே முட்டை விற்பனை சற்று அதிகரித்து உள்ளதாலும் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, 25 காசுகள் விலை உயர்ந்து ஒரு முட்டையின் விலை 3 ரூபாய் 90 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு பிறகு முட்டை விலை அதிரடியாக உயர்வை சந்தித்து உள்ளதால், மக்களிடையே அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.