தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மே 18ம் தேதி உண்ணாவிரத போராட்டம்!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும், 19 ஆயிரம் டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என வரும் 18ந் தேதி சேலம் மாவட்டம், மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்க சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்:
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனாலும், அதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில், போர்க்கால அடிப்படையில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவர்கள் செயல்பட்டனர். மேலும் கொரோனா மூன்றாவது அலைகளின் போதும், ஏழரை கோடி தமிழக மக்களை காப்பாற்ற, ராணுவத்தை போல் அரசு டாக்டர்கள் செயல்பட்டனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், பணியாற்றும் 19 ஆயிரம் டாக்டர்கள் சம்பள உயர்வு கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
கடந்த, அ.தி.மு.க ஆட்சியின் போது டாக்டர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க ஆட்சி அமைந்ததும் அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும் என, உறுதி அளித்தார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு முடிந்து விட்ட நிலையில், அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. தமிழக மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய டாக்டர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Exams Daily Mobile App Download
கொரோனா முதல் அலையின் போது உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியோ, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. எனவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கும் வரை, அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை முன் எடுத்து, தன் உயிரை துறந்த, அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மர் பிறந்த ஊரான, சேலம் மாவட்டம், மேட்டூரில் வருகிற 18ந் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்க சட்டபோராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து அரசு டாக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.