அனுவை தேடி கண்டுபிடித்த சத்யா, ருக்மணி தான் காரணம்? “மௌன ராகம் 2” ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் வருண், சத்யா பிரிந்து இருக்கும் நிலையில் சத்யாவுடன் ம்யூசிக் கிளாஸ் வந்த அனு கடத்தப்படுகிறார். இந்நிலையில் சத்யா அனுவை காப்பாற்ற அதற்கு காரணம் ருக்மணி என கண்டுபிடிக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
மௌன ராகம் 2:
விஜய் டிவி சீரியல்களில் அதிக செலவுடன் எடுக்கப்பட்ட சீரியல் தான் மௌன ராகம். இதன் முதல் பாகம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் பல மாறுதல்களுடன் தொடங்கப்பட்டது. முதல் பாகத்தில் அப்பா இல்லாமல் வளரும் பெண் குழந்தை படும் கஷ்டங்களை பற்றி காட்டப்பட்டது. அதன் பின் இரண்டாம் பாகத்தில் அவள் வளர்ந்து திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் இருந்தும் கூட அந்த கஷ்டம் எப்படி எல்லாம் தொடர்ந்து வருகிறது என்பது காட்டப்படுகிறது.
புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஆல்யா மானசாவின் ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
வருண் – சத்யா திருமணத்திற்கு பிறகு அவர்களின் காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். சந்தோசமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் ஸ்ருதி ஒரு பக்கம் ருக்குமணி ஒருபக்கம் என சத்யாவிற்கு டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அதனால் சத்யா வருண் இடையே சண்டை வர சத்யா வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். ஒரு டிஜிபி வீட்டில் சத்யா அடைக்கலம் தேட அங்கே அவர்களின் பேத்தி அனு சத்யா உடன் சேர்ந்து ம்யூசிக் கிளாஸ் செல்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் குழந்தை அனு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்படுகிறார். இந்த விஷயத்தில் அனைவரது சந்தேகமும் சத்யா மீது விழுகிறது. ஆனால் சத்யா எந்த தவறும் செய்யாமல் இருக்கும் நிலையில் சத்யா அவரே களத்தில் இறங்கி வேலைகளை செய்கிறார். பின் குழந்தையை கடத்தும் வீடியோவை சத்யா டிஜிபியிடம் ஒப்படைக்கிறார். அதை வைத்து குழந்தையை கடத்திய ரவுடியை போலீஸ் பிடித்து விட்டனர். மேலும் ரவுடியிடம் இருந்து கிடைத்த போன் நம்பரை வைத்து ருக்மணி தான் காரணம் என சொல்கிறார். அதனால் ருக்மணியை பார்க்க சென்ற சத்யா இப்போது நீங்கள் இந்த வீட்டில் இருப்பது நான் போட்ட பிச்சை என கோபமாக ருக்குமணியிடம் கேள்வி கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.