தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காலையில் சிற்றுண்டி!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனி காலை தோறும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வரவேற்புகளை பெற்று வருகிறது.
காலை சிற்றுண்டி
பள்ளிக்கு செல்லும் ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டம் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. இப்போது தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டாலும், பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு கிடைக்காமல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் சிற்றுண்டியும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வந்தது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை மெகா முகாம்!
இதனை கருத்தில் கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது, திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராகி ஒரு ஆண்டு கடந்திருக்கும் நிலையில் மக்களுக்கு நன்றி கூறி சட்டப்பேரவையில் இன்று (மே.7) உரையாற்றினார். தொடர்ந்து சில நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்ட அவர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை தோறும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்படும் என்றும் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு படிப்படியாக மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.