தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை மெகா முகாம்!
தமிழகத்தில் நாளை மே 8ம் தேதி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல அப்பாவி மக்கள் பலியாகினர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தடுப்பூசிகளை மக்களுக்கு இரண்டு தவணையாக போடப்படுகிறது. முதல் தவணையை போட்ட பிறகு 90 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை போடப்படும்.
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 – திமுக அரசின் ஓராண்டு நிறைவு!
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் சுமார் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதேபோல் ஒரு கோடியே 48 லட்சம் பேர் இரண்டாவது தவணை போடவில்லை என்று தெரிவித்திருக்கிறது. 2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என சுமார் 2 கோடி பேர்கள் தடுப்பூசி போடாமல் இருக்கின்றன. அதனால் கண்டிப்பான முறையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Exams Daily Mobile App Download
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த வசதியாக நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கண்டிப்பான முறையில் தடுப்பூசியை போட்டு கொள்ளும் படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் கூறியிக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படுகிறது.