தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக பள்ளிகளில் மத மாற்றம் குறித்த புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத மாற்றம் தொடர்பாக வந்த புகார்கள் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதமாற்றம்:
பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் வெவ்வேறு சமுதாய மக்களுடன் இணைந்து கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இங்கு எம்மதமும் சம்மதமும், அனைவரும் சமம் என்று கற்பிக்கப்படுகிறது. இத்தகைய இடத்தில் மனவர்களை மத மாற்றத்திற்கு தூண்டுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகளில் மாணவர்களை மதம் மற்றும் வகையில் போதனைகள் அறிவுரைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? – சுகாதாரத்துறை செயலாளர் பதில்!
அதாவது தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளியில், கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக தகவல் வெளியானது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதே போல கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் மதமாற்ற விவகாரத்தில் பள்ளி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இப்பிரச்சனையை விசாரிக்கத் தொடங்கியது. மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Exams Daily Mobile App Download
பள்ளிகளில் மத மாற்றம் குறித்த புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதமாற்றம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விதிகளை உருவாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்றும் நீதிமன்றம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சாவூர் பள்ளியில் நடைபெற்ற மத மாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.