தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? – சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? - சுகாதாரத்துறை செயலாளர் பதில்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? - சுகாதாரத்துறை செயலாளர் பதில்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? – சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

தமிழகத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம், அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

மீண்டும் ஊரடங்கு அமல்:

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலைதூக்கி உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து யுக்திகளும் நம்மிடமே உள்ளது. அதை நாம் பயன்படுத்துவதை தவறிவிட்டோம். அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும். முகக்கவசம், தடுப்பூசி ஆகியவை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான யுக்திகள். மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மைக்ரோ திட்டம் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உள்ளது. இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் சந்திரகலா – கோதைக்கு தெரியவருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 9 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளது. 2,800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் போதுமான அளவு உள்ளது. மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருக்கிறது. பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாநிலத்த்தில் இன்னும் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை, விரைவில் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. இது குறித்து தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல என்றார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!