தமிழக ரேஷன் கடைகளில் இனி கோதுமை விநியோகிக்கப்படாது – உணவுத்துறை திடீர் தகவல்!
கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகமான வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக கோதுமை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ரேஷன் கடைகளில் கோதுமை விநியோகிக்கப்படாது என உணவுத்துறை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி 69 கோடி பேர் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் கைரேகை பதிவின் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மே 16ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை நீட்டிப்பு? மாநில அரசு முக்கிய ஆலோசனை!
இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் நலனுக்காக ”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் அட்டைதாரர் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கி பெற்று கொள்ளலாம். மேலும், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் சுமார் 81 கோடி மக்கள் 5 கிலோ உணவு தானியம் பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகமாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் கோதுமை பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு இனி கோதுமை ரேஷன் கடைகளில் விநியோகிக்கபடாது என உணவு துறை செயலாளர் சுதன்சு பாண்டே அறிவித்துள்ளது. மேலும், கோதுமைக்கு பதிலாக அரிசியை கூடுதலாக கொடுக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உள்நாட்டில் கோதுமை பயன்பாடு மற்றும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அதற்கான தீர்வும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.