மே 16ம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை நீட்டிப்பு? மாநில அரசு முக்கிய ஆலோசனை!
மாநிலம் முழுவதும் தற்போது நிலவும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து கர்நாடகா மாநில கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுமுறை நீட்டிப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் கடுமையான வெப்ப நிலை நிலவுகிறது. இதன் பின்னணியில், பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கோடை விடுமுறையை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இப்போது கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 16ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், இதனை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
மாநிலத்தில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல் – பதற்றம் நீடிப்பு!
இப்போது, மே 16ம் தேதிக்கு மேல் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால் அவர்கள் கடும் வெயிலால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கோடை விடுமுறை மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இதற்கு முன்னதாக கர்நாடகாவில், கோடை விடுமுறை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே 16 முதல் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதாவது கொரோனா தொற்று பின்னணியில் கல்விக் காலம் பாதிக்கப்பட்டதால் சில விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் ஹரியானாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படும் நேரம் மே 4 ஆம் தேதி முதல், தினசரி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரைக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதே போல பஞ்சாபில் வெப்பச் சலனம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கடும் வெயிலுக்கு மத்தியில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வீட்டில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், சில மாநிலங்களில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.