தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் பொருட்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ரேஷன் கார்டு
தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டமாக ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தில் செயலில் இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் இருக்கும் சாமானிய பொதுமக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு இன்னும் பல அருமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் பொங்கல் பண்டிகை வந்தது. இந்த பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தையும் விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 கோடை விடுமுறை தொடக்கம்!
இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் ஒரு சில புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தை கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் நசிமுதீன் தெரிவித்து உள்ளார். இது குறித்து முழு விவரத்தையும் கீழே பார்ப்போம். அவர் கூறியது என்னவென்றால், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வதற்கு மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நான்கு அதிகாரிகள் இருக்கும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, உணவு வழங்கல் துறை, கூட்டுறவு துறை, நுகர்பொருள் வாணிப கழகம் போன்ற மூன்று துறைகளிடமும் ஒருங்கிணைப்பு இல்லாததால், ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவது போன்ற புகார்கள் தொடர்கின்றன.மேலும் ரேஷன் விநியோகம் தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துகின்றனர். இது தவிர தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் தலா, நான்கு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை நியமித்து, பொருட்களை கண்காணிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.