1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 கோடை விடுமுறை தொடக்கம்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மே 14 கோடை விடுமுறை தொடக்கம்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மே 14 கோடை விடுமுறை தொடக்கம்!

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 14 கோடை விடுமுறை தொடக்கம்!

இந்திய நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளும் சரிவர இயங்கவில்லை. தற்போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பஞ்சாப் அரசு மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் சரிவர இயங்கவில்லை. அதனால் மாணவர்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டதும், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதும் முக்கிய காரணமாகும். அத்துடன் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தாமதமாக தொடங்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் குறைவான நாட்களே நடைபெற்றுள்ளன. அதனால் பாடத்திட்டத்தை குறைத்து அதன்படி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும். தற்போது குறைவான நாட்களே நேரடி வகுப்பு நடைபெற்றுள்ளதால் பொதுத்தேர்வு இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதிலே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. மேலும் இது தொடர்பாக முதல் மந்திரி பகவந்த் மான் ட்விட்டரில் அறிவித்துள்ளாவது, வருகிற மே 14ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!