ரூ.56,100/- ஊதியத்தில் TNPSC-ல் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள District Child Protection Officer பதவிக்கு என மொத்தமாக 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் District Child Protection Officer பதவிக்கு என்று மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Sociology / Social Work / Psychology / Child Development / Criminology பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.07.2022 ம் தேதியின் படி இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.
- விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- விண்ணப்ப கட்டணம் ரூ.150/- அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
- தேர்வு கட்டணம் ரூ.200/- அனைத்து விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் SC / ST / PWD / Widow விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.