இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் மாநில முதவர்களுடன் கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்தது. இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
மே 2ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – முதல்வர் பரிந்துரை!
மேலும் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவாக படிப்படியாக பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை நோக்கி திரும்பிய நிலையில் பொது மக்களின் நலன் கருதியும், தொழில் சரிவை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த தாக்குதலாக கொரோனா நான்காம் அலை பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
Exams Daily Mobile App Download
இந்த வீடியோ கான்பரன்சில் டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப், உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர் ,18 வயதுக்கு மேற்பட்டோரில், 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மிக அவசியம் நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பாதிப்புகளால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.