மே 2ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – முதல்வர் பரிந்துரை!
தற்போது நிலவும் கோடை வெப்பத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.
கோடை விடுமுறை
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சில வடக்கு மாநிலங்கள் கூட கோடை வெப்பத்தின் தாக்கத்தினால் கடுமையான விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நிலவும் வெப்பச் சலனம் காரணமாக மே 2ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை அறிவிக்குமாறு மாநிலக் கல்வி அமைச்சரிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருக்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
இது குறித்து அவர் கூறுகையில், வேறு சில மாநிலங்களில் நடந்ததைப் போல மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்றுநோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டால், இந்த நடவடிக்கை குழந்தைகளை கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்புகளிலிருந்து பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கோடை விடுமுறையை மே 2 ஆம் தேதியாக அறிவிக்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவிடம் வலியுறுத்தி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
மேலும், மே 2 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறையை தனியார் பள்ளிகளும் செயல்படுத்த வேண்டும் என்று மாநில செயலகத்தில் நடந்த நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பானர்ஜி கூறி இருக்கிறார். இந்த விடுமுறை, மாணவர்களை கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் முதல்வரின் பரிந்துரையின் படி மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.