சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,800 க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.272 அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் ஒரே நாளில் மீண்டும் ரூ.272 உயரந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் பல மடங்காக பெருகி கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்து கொண்டே சென்றாலும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமான திட்டமாகவும் தாய்மார்கள் எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்துள்ளது.
தீவிரமடையும் கொரோனா, மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் திடீர் உத்தரவு!
பங்குச் சந்தை நிலவரம் சரிவடைந்ததால் எண்ணெய், டீசல், பெட்ரோல் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும் குறைந்துமாய் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,850 க்கு விற்பனையானது.
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.39,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.34 அதிகரித்து, ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு ரூ.72.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.