தீவிரமடையும் கொரோனா, மீண்டும் பள்ளிகள் மூடல் – அரசின் திடீர் உத்தரவு!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வைரஸ் பரவல் உயர்ந்து கொண்டே வருவதால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஒன்றாக பெய்ஜிங் நகரில் உள்ள பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பள்ளிகள் மூடல்:
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஆல்பா, பீட்டா, காமா,டெல்டா,டெல்டா பிளஸ்,ஒமைக்ரான்,டெல்மிக்ரான் என பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த மாதம் முதல் கொரோனா தினசரி பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. சீனாவில் 333 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
நாட்டு மக்கள் தொகையில் 88.3 % பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். எனினும் கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக உயர்ந்து நாள்தோறும் 20,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் நோய் பரவல் உச்சம் தொடுவதால் கடந்த 1-ம் தேதி முதல் ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமலில் உள்ளது. அமலில் உள்ள கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு கடுமையான தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பெய்ஜிங் வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் பெய்ஜிங்கின் சாயாங் பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஷாங்காயை போன்று பெய்ஜிங்கிலும் ஊரடங்கு அமல் செய்யப்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்திருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர். இந்த நோய் பரவலால் சீனாவின் பொருளாதாரமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெய்ஜிங்கில் நாளுக்கு நாள் பாதிப்பு விஸ்வரூபம் எடுப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை மூட நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.