விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சித்து தனது மனைவி பற்றி உருக்கமாக பேசிய விஷயம் – வைரலாகும் வீடியோ!
சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருது கிடைத்தது. அந்த விருதை தனது மனைவி ஷ்ரேயா கையால் தான் சித்து வாங்கியுள்ளார். மேலும், அந்த விழாவின் போது ஷ்ரேயாவை பற்றி புகழ்ந்து பேசும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜா ராணி 2:
கலர்ஸ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலின் மூலமாக அறிமுகமாகி ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் சித்து மற்றும் ஷ்ரேயா. இவர்கள் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தான் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். சித்து மற்றும் ஷ்ரேயாவின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் மீண்டும் மற்றொரு சீரியலில் இணைந்து நடிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர்.
தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் சரவணன் நடித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அன்புடன் குஷி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அன்பே குஷி சீரியல் நிறைவடைந்ததால் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருது கிடைத்தது. அந்த விருதை தனது மனைவி ஷ்ரேயா கையால் தான் சித்து வாங்கியுள்ளார்.
முதலில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு ஷ்ரேயாவை சித்து அழைத்தபோது ஷ்ரேயா வரவில்லை என்று கூறியிருக்கிறார். பின்பு சர்ப்பிரைஸ்ஸாக எண்ட்ரி கொடுத்து சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருதை வழங்குகிறார். பின்பு, இந்த விருது வழங்கும் விழாவில் ஷ்ரேயா குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். ஸ்ரேயா மட்டும் இல்லையென்றால் தப்பான வழியில் சென்று இருப்பேன் என்றும் அவர் என் வாழ்க்கையில் கிடைத்தது வரம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் சித்துவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.