தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – ஏப்ரல் 29 ஆம் தேதி சிறப்பு முகாம்!
தமிழகத்தில் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வேலை வாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக எந்த மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வில்லை. இதனால் பல இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் எந்த தனியார் நிறுவனங்களிலும் புதிதாக எந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்துவிதமான கல்வி தகுதி பெற்றவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 2 முதல் 4 நாட்களுக்கு பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதனையடுத்து வேலை அளிக்கும் நிறுவனங்கள், வேலை நாடுவோர் www.tnprivatejobs.tn.gov.in இந்த இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம். மேலும், இது குறித்த விபரங்களை அறிய விரும்பினால் இந்த [email protected] மின்னஞ்சல் அல்லது 0427 – 2401750 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.