தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – ராணிப்பேட்டையில் தனியார் முகாம்!
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
படித்து வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த நிறுவனங்களிலும் புதிதாக இளைஞர்களை வேலைக்கு எடுக்க வில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் அனைத்து தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பினை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!
மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறிப்பாக கிராமத்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த கிராமத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் அனைவருமே கலந்துகொண்டு தங்கள் பணியில் சேர்ந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகத்திற்கு சென்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.