தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் வர உள்ள நிலையில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதனையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதே போல 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதியும் மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தற்போது 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். இந்த குறிக்கப்பட்ட பாடத்திட்டம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வுக்கான பாடங்கள் நடத்தாமல் இருந்தால் அவற்றை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.