கணவரின் பெயர் கோபி என சொன்ன பாக்கியா, ராதிகாவுக்கு வந்த சந்தேகம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு இன்னும் கோபி பற்றிய உண்மையான முகம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ராதிகாவும் பாக்கியாவும் கோவிலில் பேசிக் கொள்ள பாக்கியாவின் கணவரிடம் ராதிகா பேச வருகிறேன் என சொல்கிறார். அப்போது உங்க கணவரின் பெயர் என்ன என கேட்க கோபி என பாக்கியா சொல்ல அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை நடத்தும் விதத்தை பார்த்தால் அனைவருக்கும் கோவம் வருகிறது. ஆனால் பாக்கியா கோபி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு ஏன் பொறுமையாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியாமல் இருக்கிறது. மறுபக்கம் ராதிகா பாக்கியா பிரிந்துவிடுவார்கள் என நினைக்க ஆனால் அவர்கள் மீண்டும் சேர்ந்து விடுகிறார்கள். அதனால் கோபிக்கு பெரிய சிக்கல் வர போகிறது. கோவிலில் பார்த்த பாக்கியா ராதிகாவிடம் எங்க வீட்டில் இனி வேலை செய்ய வேண்டாம் என சொன்னதாக சொல்ல அதை கேட்டு ராதிகா வருத்தப்படுகிறார்.
ExamsDaily Mobile App Download
பாக்கியாவிற்கு உதவி செய்ய வேண்டும் என ராதிகா நினைக்க நான் வந்து உங்களது வீட்டில் பேசுகிறேன் என ராதிகா சொல்கிறார். அப்போது உங்களது கணவரின் பெயர் என்ன என ராதிகா கேட்க கோபி என பாக்கியா சொல்கிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைய நான் திருமணம் செய்து கொள்ள இருப்பவர் பெயரும் அதான் என சொல்கிறார். ஆனால் அப்போது கூட பாக்கியாவிற்கோ ராதிகாவிற்கோ கோபி மீது சந்தேகம் வராமல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்யும்.
நடிகை ஆலியா வளைகாப்பு நிகழ்ச்சியில் வெளியான வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் கோபி கண்டிப்பாக இவர்களது நட்பின் மூலமாக தான் மாட்ட போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. பாக்கியாவும் கோபியும் இன்னும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசாமல் நட்பாக பழகுவது எல்லாம் கோபியின் நல்ல நேரமா என ரசிகர்களுக்கு சந்தேகம் வர வைக்கிறது. இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக செல்வதால் இன்னும் சில எபிசோடுகள் கடந்து தான் கோபி சிக்குவார் எனவும், ஆனால் அதன் பின்னால் தான் முழு கதையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.