தமிழகத்தில் ஒரு ரேஷன் கார்டுக்கு 1200 ரூபாய் – வெளியான ஷாக் தகவல்!
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டத்தில், ஒரு ரேஷன் கார்டு வாங்க ரூ.1200 கேட்டதாக புகார் வைக்கப்பட்டது. இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு தகவல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால், (ஏப்ரல் 24-ம் தேதி) நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும்.கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
TCS, Infosys, HCL Tech நிறுவனங்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – கடந்த நிதியாண்டில் நடவடிக்கை!
இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார். மேலும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, அவரது கணவரும் குத்தாலம் திமுக ஒன்றிய செயலாளருமான மங்கை சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அந்த கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும் முன்பே எவ்வித அரசு பொறுப்பிலும் இல்லாத திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மைக் மூலம் பதில் அளித்தார். இந்த நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் புது ரேஷன் அட்டை வாங்குவதற்கு 1,200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ் பாண்டியன் என்பவர் குற்றச்சாட்டு வைத்தார்.
ExamsDaily Mobile App Download
இந்த புகாரிற்கு செவி சாய்க்காத மங்கை சங்கர் அவரது பேச்சை தடுத்து வேறு கதைக்கு சென்றார். ஆனால் தமிழ் பாண்டியன் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தபடியே பேசி கொண்டிருந்தார். இதையடுத்து அவரது பேச்சை நிறுத்த சொன்ன பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மைக்கில் பொதுவெளியில் இப்படி பேசக் கூடாது. இது புகார் தெரிவிப்பதற்கான கூட்டம் அல்ல. உங்கள் புகார் மற்றும் குறைகளை மனுவாக எழுதி தாருங்கள். விசாரிக்கிறோம் என்று பேசினார். இதையடுத்து புகாரளித்த அந்த இளைஞரிடம் இருந்த மைக் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. அப்போது கிராம சபைக் கூட்டம் பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக நடைபெறவில்லை, திமுக அரசின் புகழ் பாடுவதற்கு மட்டுமே நடைபெற்றதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.