“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத பாலா – காரணம் இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் பலரின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் பாலா, சென்ற வார சீசனில் கலந்து கொள்ளாமல் இருந்ததால் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் அதற்கான விளக்கம் ஒன்றை பாலா கொடுத்திருக்கிறார்.
குக் வித் கோமாளி பாலா:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த அளவிற்கு மக்களின் விருப்பமான நிகழ்ச்சி ஆகும் என தொடக்கத்தில் நினைத்து பார்க்கவில்லை. அதன் பின் தொடங்கப்பட்ட 2 சீசன்களும் வெற்றி கண்ட நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது சீசன் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் கடந்த சீசன்களில் கலக்கிய கோமாளிகள் இந்த சீசனிலும் வந்தனர்.
தொழிலை நிறுத்த சொல்லும் கோபி, வருத்தத்துடன் முடிவெடுத்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
ஆனால் இந்த சீசனில் புகழ் கலந்து கொள்ளவில்லை நேரம் கிடைக்கும் போது ஒரு சில எபிசோடுகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் புகழின் இடத்தை பாலா நிரப்பி வருகிறார். வாரந்தோறும் பாலாவின் கெட்டப் மற்றும் டைமிங் காமெடி எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும் பாலா தன்னுடைய முழு திறமையையும் இந்த ஷோவில் காட்டி மக்களை கவர்ந்த நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் அவருக்கு “சிறந்த காமெடியன்” அவார்ட் வழங்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் பாலா சென்ற வார எபிசோடிற்கு வரவில்லை. அதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். பாலாவிற்கு பதிலாக தீனா கலந்து கொண்டார். இருந்தாலும் பாலா இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர் அவர் ஏன் வரவில்லை என ரசிகர்கள் பல சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினார்கள். அது குறித்து பாலா விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதாவது பாலா தற்போது வெளியூரில் சிக்கிக்கொண்டதால் ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர் நிச்சயம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது