தமிழக பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உலகம் முழுவதும் அதிகமாக இருந்து வந்தது. பல அப்பாவி மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். மக்களின் நலனில் அக்கறை கொண்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டும் எனவும், அப்படி வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
மேலும், பொது மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப நடவடிக்கை!
இந்நிலையில், தலைநகரான டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.