தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப நடவடிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் 500 நியாயவிலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது குரூப் 2 தேர்வின் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குரூப்4&VAO தேர்வுகான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து கூட்டுறவுத்துறையில் உள்ள ரேஷன் கடைகளிலும் காலியிடங்கள் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? பிரதமர் எடுக்கப்போகும் முடிவு என்ன!
கடந்த ஜனவரி மாதம் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. மிக குறுகிய காலத்தில் அனைவருக்கும் பொருட்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியது. பரிசுப் பொருட்கள் விநியோகம் தாமதமானது. அப்போது காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ExamsDaily Mobile App Download
இதனையடுத்து விரைவில் ரேஷன் கடையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே பெண்கள் விற்பனையாளர்களாக மற்றும் கட்டுனர்களாக நியமிக்கப்படுதலை குறித்து கடந்தாண்டு செப்டம்பரிலும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விற்பனையாளர்கள் தற்போது வேலை செய்யும் நியாயவிலைக் கடைகளில் ஒரு உதவியாளரையோ அல்லது கட்டுனரையோ நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.