முல்லையை கவனித்து கொள்ளும் குடும்பம், மூர்த்திக்கு நன்றி சொல்லும் முல்லை – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் முடிந்து வீட்டிற்கு வர கதிர் நல்லா ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் மூர்த்தி வந்ததும் முல்லையை பார்க்க வர அதை நினைத்து முல்லை சந்தோசப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையை பத்திரமாக கூட்டிக் கொண்டு வர அவரே ஆட்டோவை ஓட்டி கொண்டு வருகிறார். அப்போது சைக்கிளில் செல்லும் ஒருவர் கூட ஆட்டோவை முந்தி செல்கிறார். அப்போது ட்ரைவர் எல்லாம் கிண்டல் செய்ய கதிர் பக்குவமாக போனால் தான் நல்லது என சொல்கிறார். கஸ்தூரி முல்லையை பார்க்க காத்துக் கொண்டிருக்க நீண்ட நேரமாகியும் வரவில்லை அதனால் கஸ்தூரி இவ்வளவு நேரமாகுமா என கேட்க ஆமாம் இது பெரிய டிரீட்மென்ட் என சொல்கிறார். அப்போது நீங்க கிளம்புங்கள் என சொல்ல ஏன் அவளிடம் உங்களை கேட்ட கேள்விகளை கேட்பேன் என பயமா என கேட்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் கஸ்தூரி அதெல்லாம் நான் கேட்கமாட்டேன் என சொல்ல அப்போது தனம் முல்லை கதிர் வருகிறார்கள். முல்லை சோபாவில் அமர கதிர் படுக்க வேண்டும் என சொன்னாய் இப்போது இங்கே உட்காருகிறாய் என கேட்கிறார். பின் கஸ்தூரி சத்தம் போட எப்போ வந்தீங்க என கேட்கிறார். அப்போது கஸ்தூரி நான் முல்லையை பார்க்க வந்தேன் என சொல்கிறார். கதிர் முல்லையை கூட்டிட்டு வந்து ரூமில் விட எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். அப்போது கஸ்தூரி வந்து பரவாயில்லை இந்த குடும்பத்தில் உன்னை மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்கள் என சொல்ல, எல்லாம் என்னால் தான் என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா எப்படி என கேட்க நான் பரிகாரம் செய்ய சொன்னதால் தான் இதெல்லாம் நடந்தது என சொல்கிறார்.
வெளியே ஐஸ்வர்யாவும் மீனாவும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அப்போது தனம் பயப்பட நாங்க சும்மா தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என சொல்கிறார். பின் ஜீவாவும் மூர்த்தியும் வருகின்றனர். அவர்களிடம் மருத்துவமனையில் நடந்ததை எல்லாம் தனம் சொல்லி சந்தோசப்படுகிறார். பின் முல்லையை கதிர் பக்குவமாக பார்த்துக் கொள்ள முல்லையை எழுந்திருக்கவிடாமல் செய்கிறார். பின் தனம் வந்து என்ன நடக்கிறது என கேட்க காலை கூட அசைக்க விடாமல் இருப்பதாக சொல்கிறார். தனம் டாக்டர் அதை தான சொன்னார்கள் என சொல்கிறார்.
அப்போது மூர்த்தியும் ஜீவாவும் முல்லையை பார்க்க வருகின்றனர். முல்லையை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்ல உடம்பு முடியவில்லையா என மூர்த்தி கேட்கிறார். ஆமாம் ஆனால் எனக்கு மனது சந்தோசமாக இருப்பதாக முல்லை சொல்கிறார். பின் ரொம்ப நன்றி என முல்லை மூர்த்தியிடம் சொல்கிறார். அப்போது ஜீவா கதிரிடம் மருந்து மாத்திரை எல்லாம் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என சொல்கிறார். கதிர் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்க இருவரையும் தூங்க சொல்லிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர். இரவு தூங்கி கொண்டிருக்கும் போது முல்லை எழுந்து பாத்ரூம் போக வேண்டும் என் நினைக்கிறார். அப்போது கதிர் எழுந்து என்ன ஆச்சு என கேட்க அப்போது முல்லை பாத்ரூம் போக வேண்டும் என சொல்கிறார். பின் முல்லையை தூக்கி கொண்டு கதிர் பாத்ரூம் வரை செல்கிறார்.