தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசு பரிசீலனை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளார். தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2003 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தில் பணி காலத்திற்கு பிறகு பண பலன்களை ஊழியர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை: திடீரென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அதே போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. இதற்கு 1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. இதனை ஆராய்ந்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்று பதிலளிக்கப் பட்டுள்ளது.