தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் சார்பில் பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனா அச்சத்தின் காரணமாக மாணவர்களின் நலனுக்காக இரண்டு வருடமாக பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.
TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மேலும், இந்த ஆண்டு மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். பொதுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் வெகுவிரைவாக நடத்தப்பட்டு வருகிறது. பாடத் திட்டங்கள் ஏதும் முடிக்காத காரணத்தினாலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதாலும் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்பாசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இப்போது தொடக்கப் பள்ளிகள் சார்பில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.