தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓமைக்ரான் வைரசின் உருமாற்ற அடைந்த எக்ஸ்இ வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அண்டை நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் ஓமைக்ரான் வைரசின் உருமாற்ற அடைந்த எக்ஸ்இ வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, ஓமைக்ரானின் உருமாறிய புதிய வகை எக்ஸ்இ தொற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் தமிழகத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை 76% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் சிறிது காலங்களில் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.