பாக்கியா, கோபி & ராதிகா மூன்று பேரையும் கைது செய்த போலீசார் – கோபியின் நிலை கவலைக்கிடம்!
பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு அனைத்து குழந்தைகளும் மயக்கமானதால் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என மூன்று பேரையும் போலீஸ் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியா மற்றும் ராதிகாவிற்கு தெரியும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் எப்போது தான் கோபி மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பாக்கியாவிடம் மாட்டிக்கொள்வது போல வந்து கோபி தப்பித்துக்கொண்டே தான் இருக்கிறார். தற்போது மயூ பிறந்தநாளுக்காக 100 பேருக்கு சமைத்து கொடுக்கலாம் என ராதிகா முடிவு செய்கிறார்.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘ராஜா ராணி 2’ சந்தியா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
இந்த ஆர்டரை பாக்கியாவிற்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து பாக்கியாவை சமைக்க கூறுகிறார். பின்பு, பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை அனாதை ஆசிரமத்தில் உள்ள 100 குழந்தைகளுக்கு ராதிகா கொடுக்கிறார். அந்த உணவை ராதிகா மற்றும் மயூவை சாப்பிட விடாமல் ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயக்கம் போட ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனால் பாக்கியாவை போலீஸ் கைது செய்கின்றனர். பாக்கியாவை போலீசார் கைது செய்த செய்தியை கேட்டதும் கோபிக்கு மகிழ்ச்சியாகிவிடுகிறது. பின்பு, யார் இந்த உணவை கொடுத்தது எனவும் போலீஸ் விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு பிறகு கோபி மற்றும் ராதிகாவையும் போலீஸ் கைது செய்கின்றனர். பாக்கியா இருக்கும் அதே காவல் நிலையத்திற்கு தான் கோபி மற்றும் ராதிகாவை அழைத்து வருகின்றனர். பாக்கியா மற்றும் ராதிகா இருவருக்கும் உண்மை தெரிய போகிறது. இதற்கு பிறகு கோபி என்ன பொய் சொல்லி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.