தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்தது. வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் காணப்படும். ஆனால் இந்த மாதத்திலேயே பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுக்கத் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக – வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பரவலாக தமிழகத்தில் கடந்த 2, 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக குளிர்ந்த வானிலை நிலவியதால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு அடிப்படையில் நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதையடுத்து தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ் வேளூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகப்படியான மழையால் நாகை மாவட்டத்தில் தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகையில் உள்ள பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அருண் தம்புராஜ் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஊருக்குள் நுழைந்த XE வகை கொரோனா வைரஸ்?
கொரோனா பாதிப்பு குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக சென்று வருகின்றனர். இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. நாகையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டப்படி இன்று 11ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனிடையே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.