கண்ணம்மாவிடம் விவாகரத்து விஷயத்தை பற்றி கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்துள்ளது. இவை அனைத்தும் கதை வேறு ஒரு பாதையில் மீண்டும் வேகமெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா தொடர் ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் கதையை மீண்டும் வேகமெடுக்க வைக்கும் வகையில் இயக்குனர் பல்வேறு திருப்பங்களை கொண்டு வந்துள்ளார். கதையில் புதிய கதாபாத்திரமான விக்ரம் அறிமுகப்படுத்தப்பட்டு அவர் யார் என்ற கேள்விக்குறியாய் ஏற்படுத்தியது. விக்ரம் சௌந்தர்யா மற்றும் வேணு உடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்றும் சௌந்தர்யாவை விக்ரமும் காதலித்தார் என்றும் வேணு கூறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் – இவருக்கு பதில் இனி இவரே!
விக்ரம் சௌந்தர்யா வீட்டிற்கு வர இவர்களின் கல்லூரி கதை கதையை தன் மகன்களிடம் வேணு சொல்லி வருகிறார். அதன்பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக ஆடி பாடுவது போல் காட்சிகள் இருந்தது. இன்னொரு புறம் வெண்பா பாரதியின் விவாகரத்து வழக்கை நடத்தும் வக்கீலிடம் சென்று அந்த கேஸை பற்றி விவரங்களை கேட்கிறார். இருவரும் உறுதியாக இருந்தால் விரைவில் விவாகரத்து கிடைத்து விடும் என்று வக்கீல் சொன்னதும் வெண்பா நிம்மதி அடைகிறார். இது பற்றி பாரதியிடம் கூற உன் வேலையை நீ பார் வெண்பா என்று பாரதி கோபம் அடைகிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ & ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு இடையே நடைபெற்ற மோதல் – ரசிகர்கள் உற்சாகம்!
லட்சுமி கடந்த சில நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்வதாக கண்ணம்மா சந்தேகத்தில் இருக்கும் போது இன்று அதை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணம்மாவிடம் வந்து உனக்கும் அப்பாகும் விவாகரத்து ஆகிடுச்சா அம்மா என்று கேட்கிறார். லட்சுமி ஏன் இப்படி கேட்கிறார் என்று கண்ணம்மாவிற்கு மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. கதையில் சுவாரசியம் அதிகப்படுத்துவதற்காக செய்த மாற்றங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாக உள்ளது.