தமிழக அரசு VAO வேலைவாய்ப்பு 2022 – 5 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக VAO காலிப்பணியிடங்கள்:
கிராம உதவியாளர் பதவிக்கு 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கிராம உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2022 அன்று அனைத்து வகுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள், இதர வகுப்பினருக்கு அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள நிலக்கோட்டை வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 05.04.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் .