பிக் பாஸ் அல்டிமேட்டில் பணத்தை வென்ற போட்டியாளர் யார் தெரியுமா? ஷாக்காகிய ரசிகர்கள்!
ரியாலிட்டி ஷோவுக்கு பஞ்சமில்லாத விஜய் டிவி யில் ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ முடிவுக்கு வர உள்ள நிலையில் தற்போது செம்ம கெத்தாக விளையாடி 15 லட்சத்தை அடித்த நபர் யார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பிரபலமாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் ஷோ:
விஜய் டிவி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டர்டைன் செய்வதற்க்காக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறு உருவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் இதில் கலந்து கொண்டனர்.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!
பிக் பாஸ் ஷோக்கு கிடைத்த ரீச் அளவுக்கு இந்த ஷோவுக்கு ரீச் இல்லை ஏனென்றால் வந்ததும் தெரியவில்லை, என்ன நடந்தது என்றும் தெரியவில்லை அந்த அளவிற்கு பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றே சொல்லலாம். எல்லோரும் விளையாட்டை உண்மையாக விளையாடாமல் ஒரு மாதிரி Safe Game விளையாடினார்கள். ஆனாலும் இந்த ஷோவை சிலர் தொகுப்பாளராக வந்த சிம்புக்காக பார்த்து வந்தனர். தற்போது ஷோ முடிவுக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.
உடனே ஷோ முடிவுக்கு வருவதால் தான் சோகம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம் ஏனென்றால் அந்த சோகமே சிம்புவை இனி ஜாலியாக வாரா வாரம் பார்க்க முடியாதே என்ற ஒரு ஏக்கத்தால் தான். இந்நிலையில் பல டாஸ்க்குகள் கொடுத்து வெற்றியாளர்களை கணிக்கும் நேரத்தில் 2 டாஸ்க்குகளை மிகவும் கடினமாக விளையாடி வெற்றி பெற்றவராக தற்போது 15 லட்ச ரூபாயை பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக அறிமுகமாகிய ஸ்ருதி தட்டிச் சென்றுள்ளார். அவரது விளையாட்டை மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.