SBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Advisor & Chief Information Officer பணியிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Advisor (Operations Support Subsidiary) – 01, Chief Information Officer – 01, Chief Technology Officer – 01, Deputy Chief Technology Officer (e-Channels) – 01, Deputy Chief Technology Officer (Core Banking) – 01 என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 31.12.2021 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது Advisor பதவிக்கு அதிகபட்சம் 62 ஆகவும், Chief Information Officer& Chief Technology Officer Max பதவிக்கு அதிகபட்சம் 55 ஆகவும், Deputy Chief Technology Officer (e-Channels) பதவிக்கு அதிகபட்சம் 45 ஆகவும் இருக்க வேண்டும்.
- வங்கி துறையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree, Masters Degree, MBA முடித்திருக்க வேண்டும்.
- ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பதாரர் 31.12.2021 அன்று வங்கி/நிதி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பொது மேலாளர்/தலைமை பொது மேலாளர் பதவியில் இருக்க வேண்டும் அல்லது ரூ.5.00 லட்ச கோடிகளுக்கு மேல் சொத்து அளவு கொண்ட பெரிய வங்கியில் அதற்கு சமமான கிரேடுகளில் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பம்/ஐடி ஆகியவற்றில் 20+ ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்ற விண்ணப்பதார்கள் தலைமை தகவல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் 20+ ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வங்கி – IT தொடர்பான பகுதிகள்/ IT கொள்கை மற்றும் திட்டமிடல்/ நிதி நெட்வொர்க்குகள் மற்றும் பயன்பாடுகள்/ நிதி தகவல் அமைப்புகள்/ சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்/ பணம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் பணிபுரிந்திருக்க வேண்டும், இதில் 5 ஆண்டுகள் மூத்த நிர்வாக மட்டத்தில் இருக்க வேண்டும்.
- SC/ST/PWD விண்ணப்பதார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பொது/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பதார்கள் பணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் மூலம் 31.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.