கலர்ஸ் தமிழ் “இது சொல்ல மறந்த கதை” சீரியலில் களமிறங்கிய நடிகை ரட்சிதா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இருந்து விலகிய நடிகை ரட்சிதா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
நடிகை ரட்சிதா:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ரட்சிதா மகாலக்ஷ்மி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் நடித்து வந்தார். அதில் அவருக்கு ஜோடியாக மிர்ச்சி செந்தில் நடித்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து அவர் விலக இருப்பதாக அறிவித்தார். அது குறித்து சரியான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரட்சிதா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் களமிறங்க இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – TRP இல் தொடர் பின்னடைவு! சன் டிவி சீரியல்கள் அபாரம்!
இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக கணவன் இல்லாமல் வாழும் ஒரு பெண்ணாக அவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் தொடக்க ப்ரோமோவே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அவர் ஒரு வக்கீலாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை நம்ம பக்கம் இருக்கு சாதனா கவலைப்படாதீங்க என பதிவிடப்பட்டுள்ளது. அந்த ப்ரமோவில் மகாலட்சுமியை பார்த்து பயப்படுகிறார் ரட்சிதா. மகாலட்சுமி சவுந்தர்யா என்ற கதாப்பாத்தில் நடிக்கிறார். இனிமேல் ரட்சிதாவுக்கு அவர்தான் எதிரியாக இருப்பார் என தெரிகிறது. கதிர் உண்மை நம்ம பக்கம் இருக்கு நாம் தான் ஜெயிப்போம் என்கிறார். அப்போது மகாலட்சுமியிடம் சாதனா ஒரு கிரிமினல் லாயர் என ரட்சிதாவை அறிமுகம் செய்கிறார் கதிர். இந்த ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.