10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.50000/- சம்பளத்தில் NTPC நிறுவனத்தில் வேலை !
National Thermal Power Corporation Limited எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Mining Overman, Mining Sirdar மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இங்கு மொத்தம் 178 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.03.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் |
பணியின் பெயர் | Mining Overman, Mining Sirdar மற்றும் Company Secretary |
பணியிடங்கள் | 178 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTPC காலிப்பணியிடங்கள்:
அறிவிப்பின் படி Mining Overman, Mining Sirdar and Company Secretary பணிக்கென 178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Mining Overman – 74 பணியிடங்கள்
- Mining Sirdar – 103 பணியிடங்கள்
NTPC கல்வி தகுதி:
- Mining Overman – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Mining Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- Mining Sirdar – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Company Secretary – ICSI-ல் member ஆகா இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Mining Overman – ரூ.50000/-
- Mining Sirdar – ரூ.40000/-
- Company Secretary – ரூ.120000/- முதல் ரூ.280000/- வரை
NTPC தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC விண்ணப்பிக்கும் முறை:
https://careers.ntpc.co.in/openings.php என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.