முடிவுக்கு வந்த ‘பிக் பாஸ்’ அபிநய்யின் விவாகரத்து சர்ச்சை – அவரே பதிவிட்ட புகைப்படம்! ரசிகர்கள் நிம்மதி!
பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்ற 18 போட்டியாளர்களில் ஒருவராக அபிநயும் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிய அபிநய் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சில சர்ச்சைகளில் பேசப்படுபவராக சூழ்நிலைகள் அமைந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபிநய் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அபிநய் வெளியிட்ட தகவல்:
விஜய் டிவி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் புதுப்புது நிகழ்ச்சிகள் மக்களை என்டேர்டைன் செய்வதற்க்காக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வரிசையில் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக வரும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 1 ஆரம்பமாகியது. ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டியாளர்கள் பங்கு பெறுவார்கள்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புதுவரவு – ரசிகர்கள் மகிழ்ச்சி! ப்ரோமோ ரிலீஸ்!
இவ்வாறு சீசன் 1, 2, 3, 4 அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் அடுத்ததாக சீசன் 5 தொடங்கியது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அபிநயும் ஒருவர். இவர் வெள்ளித்திரை உலகத்தில் பேரும், புகழும் பெற்ற ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் என்கிற அடையாளத்துடன் பிக் பாஸ் 5 வீட்டுக்கு போட்டியாளராக வந்திருந்தார். அவ்வீட்டில் மற்றொரு ஹவுஸ் மேட் பாவனியுடன் அபிநய்க்கு ஏற்பட்ட நட்பினால் சில சர்ச்சைகள் உருவாகியது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் – ரசிகர்கள் ஷாக்!
அதாவது அபிநய்க்கு பாவனி மீது காதல் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணத்தினால் அபிநயிக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு உண்டாகியது, அதனால் இருவரும் விவாகரத்து செய்து விட்டது போன்றும் பல புரளிகள் கிளம்பியது. அதற்கு அபிநய் இல்லை அனைத்தும் பொய் என்று சொல்லப்பட்டு வந்த நிலையிலும் வதந்திகள் நின்றபாடில்லை. இதனால் தற்போது அபிநய் தன் அன்பு மனைவி மற்றும் மகளுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் அனைத்திற்கும் பெரும் முற்றுப்புள்ளி ஒன்றை வைத்துள்ளது.