அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை அமைச்சர் தகவல்!
பாண்டிசேரியில் அரசு துறைகளில் உள்ள நிறைய காலியிடங்களை நிரப்ப இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்திய நாட்டில் கடந்த இரு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி நாட்டை ஒரு ஆட்டம் காட்டி விட்டு சென்றது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் படித்த இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். மேலும் அதே நிலையில் தான் பாண்டிசேரியில் உள்ள படித்த இளைஞர்களும் உள்ளனர். தற்போது மூன்றாம் அலையில் இருந்து வெளியே வந்து அனைவரும் இயல்பான நிலைக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
மாநிலத்தில் மார்ச் 17 முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
புதுச்சேரி அரசின் கல்வித்துறை மூலமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 148 முன் மழலையர் பள்ளிகளில் இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரி பிராந்தியத்தில் 85 பேரும், காரைக்காலில் 63 பேரும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்வித்துறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய MS தோனியின் ஷாட் – வைரலாகும் வீடியோ!
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டது. இதேபோல் புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து விடுவதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.