தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
இந்தியாவில் கடந்த வாரம் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் அதிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 5 செ,மீட்டர் வரை மழை பதிவானது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – சிறந்த திட்டங்களின் விபரம்!
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக , டெல்டா மாவட்டங்கள் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றைய வானிலை தகவலின் படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 2, 2A & 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இதை படித்தால் வெற்றி உறுதி!
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 14,15 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 13ம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.