கோபியை கண்மூடித்தனமாக நம்பும் பாக்கியா, கோர்ட்டில் நடக்கப்போகும் திருப்பங்கள் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி காட்சிகள் வர இருக்கிறது. கோபி பாக்கியாவை ஏமாற்றி கோர்ட்டிற்கு வர சொல்கிறார். அப்போது ராதிகா பார்த்துவிடுவாரா உண்மை எல்லாம் தெரிய போகிறதா என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. கதையின் நாயகி பாக்கியா மூன்று பிள்ளைகளின் அம்மா, அவர் இதுவரை பிள்ளைகள் குடும்பம் என வாழ அவர் வேலைக்கு போகவில்லை என அவரது கணவர் கோபி வெறுக்கிறார். கோபி அழகான இந்த குடும்பத்தை விட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதனால் பாக்கியாவிடம் விவாகரத்து வாங்க வக்கீலை பார்க்க அவர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வர சொல்கிறார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் புடவை ஷாப்பிங் – சூரத் விசிட்! வைரலாகும் வீடியோ!
கோபி மீது உள்ள நம்பிக்கையால் பாக்கியாவும் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் வக்கீல் நாளை உங்களது மனைவியுடன் கோர்ட்டிற்கு வர வேண்டும் என சொல்கிறார். கோபி அதை கேட்டு பதட்டம் அடைய ராதிகாவிடம் என் மனைவி பணம் அதிகம் கேட்பார் என சொல்கிறார். அப்போது ராதிகா அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுங்கள் எங்களுக்கு நீங்க மட்டும் போதும் என சொல்கிறார். பின் கோபி பாக்கியாவிடம் நாளை உனக்கு வேலை எதுவும் இருக்கிறதா என கேட்கிறார்.
அதற்கு பாக்கியா இல்லை என சொல்ல, நாளை என்னுடன் கோர்ட்டிற்கு வர வேண்டும் என சொல்கிறார். பாக்கியா அந்த ஆபீஸ்ல என்னை சேர்த்தீங்களே அது விஷயமாகவா என பாக்கியா வெகுளியாக கேட்க ஆமாம் என கோபி சொல்கிறார். கோபியை கண்மூடித்தனமாக நம்பும் பாக்கியாவை நினைத்து ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். மேலும் நாளைக்கு கோர்ட்டிற்கு வந்தால் ராதிகா பாக்கியாவை பார்த்துவிடுவார், அதனால் எல்லா உண்மையும் வெளியே தெரியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.