TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு நேர மாற்றம்! வயது வரம்பில் தளர்வு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குரூப் 2, 2ஏ தேர்வு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதில் குரூப் 1, குரூப் 2,2ஏ குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
அதன்படி குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5529 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேர்முகத்தேர்வு பதவிகளில் 116 காலிப்பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளில் 5413 காலிப்பணியிடங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்வு மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தமிழ் மொழி பாடப்பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவியல் பாடப்பகுதியில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் இருந்து 25 வினாக்களும் என மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும்.
இதில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படும். தற்போது தேர்வில் பல்வேறு மாற்றங்களை TNPSC தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முதலாவதாக தேர்வு நேரத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முன்னதாக 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வுகள் இனி வரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். மேலும் பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். அத்துடன் இத்தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது.