தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நகைகள் திரும்ப ஒப்படைப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தங்களின் நகைகளை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைக்கடன்:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தைகள் வரையறுக்கப்பட்டது. அப்போது நகைக்கடன் வழங்கியதிலும், பெற்றதிலும் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய அரசு தலைமையில் குழு அமைக்கப்பட்டது இக்குழு தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒரு வாரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – இன்று மீண்டும் திறப்பு! மார்ச் 4 வரை மக்கள் நடமாட தடை!
அதனை தொடர்ந்து நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதனையடுத்து அனைவருக்கும் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பலரும் அரசை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு அனுமதி அளித்ததை அடுத்து கூட்டுறவு சங்கத்தில் 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்ததில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதை அடுத்து நகர்ப்புறங்களில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தது.
அதனால் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவானது. தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நகரப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள், தங்களின் தங்க நகைகளை வங்கிகளில் பெற்றுக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.