ஒரு வாரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – இன்று மீண்டும் திறப்பு! மார்ச் 4 வரை மக்கள் நடமாட தடை!
கர்நாடக மாநிலத்தில் ஹர்ஷா என்பவரின் மர்ம கொலை காரணமாக சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஒரு வாரம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பள்ளி திறப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து கர்நாடக மாநிலத்திலும் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. இந்த நிலையில் ஹிஜாப் பிரச்சனை காரணமாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்றது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
அதனால் போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவமொக்காவில் உள்ள சீகேஹட்டி பகுதியில் ஹா்ஷா என்பவர் பஜ்ரங் தள அமைப்பில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 20ம் தேதி அன்று 9.30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் கலவரமாக பல்வேறு இடங்களில் பரவியது. அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் நலன் கருதி சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்கப்பட்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்கள் வருகிற மார்ச் 4ம் தேதி வரை பொது இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.