தமிழகத்தில் நாளை (மார்ச் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மின் தொடர்பான புகார்கள் தற்போது 2 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தவறாது நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எல்.கே.ஜி வகுப்புகள் மூடல் – பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை திட்டம்!
இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் முன்னதாகவே தகவல் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு தடையின்றி மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சேலம் மாவட்டத்தில் உள்ள நாளை (28.02.2022) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
பூலாம்பட்டி, பிலாக்குறிச்சி, கூடக்கல், வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெள்ளரி வெள்ளி, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம்,பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.