தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐயா வைகுண்டர் அவதார தினம் மார்ச் 4ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி அன்று ஐயா வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஐயா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகியவர்களின் ஒன்று சேர்ந்த அவதாரமாக வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர். கன்னியாகுமரி சாமித்தோப்பில் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடத்தப்படும்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் – மார்ச் மாத பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!
மேலும், மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. வைகுண்டரின் 190ஆவது அவதார தினம் வரும் மார்ச் 4ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு மக்கள் வருவார்கள்.இதனால் கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
அதன்படி, மார்ச் 4 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் , வங்கிகள் ஆகியவற்றிற்கும் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து அரசு கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அவசர பணிகளை கவனிக்கலாம். இதற்கு பதிலாக மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.