சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து உள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று வீழ்ச்சியில் இருந்த நிலையில் இன்று ஏற்றத்துடன் உள்ளது.
தங்கம் விலை சரிவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதையடுத்து ரஷ்யா அதிபர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி உக்ரைன் மீது ராணுவ படைகள் தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்று வீழ்ச்சியில் இருந்தது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,856 விலை உயர்வு ஏற்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது அத்துடன் பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளது.
ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை முடிவு!
இதையடுத்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,204 புள்ளிகள் உயர்ந்து 55,734 புள்ளிகளில் வணிகமாகிறது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 375 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் இன்று ரூ.38,408க்கு விற்பனையாகிறது.
வங்கி தேர்விற்கு படித்து வருவோர் கவனத்திற்கு – முக்கிய பாடங்கள்..!
அத்துடன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,801க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2.70 உயர்ந்து ரூ.70க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தணிந்தால் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.