மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!
உலகத்தை அதிக அச்சத்திற்கு தள்ளிய கொரோனா நோய் தொற்று அதன் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூகான் நகரில், முதன் முதலில் பரவத் தொடங்கின. இந்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொற்று பாதித்த நாடுகளில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.
இருப்பினும் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனா மட்டும் இன்னும் ஜீரோ கோவிட் கொள்கையில் தீவிரமாக உள்ளதால், தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் உட்பட இடங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அல்லது அனுமதியின்றி பொதுப் போக்குவரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத அல்லது மாவட்டம் முழுவதும் ஊரடங்கை விதிக்க வேண்டாம் என்று சீனாவின், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், அனைத்து பிராந்திய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மார்ச் 1 கடைசி நாள்!
இதனை தொடர்ந்து திரையரங்குகள், உணவகங்கள், வணிக வளாகங்களை மூட வேண்டும் என்று அறிவுறுத்தவோ வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தாக்கத்தை குறைக்கலாம் என்று கூறியுள்ளனர்.