விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – TRPயில் ஏற்பட்ட மாற்றம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சென்ற வாரம் கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நிலையில் அடுத்த வாரம் எபிசோடில் என்ன திருப்பம் வர இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா வாழ்க்கையில் வர பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இது பற்றி கோபியின் அப்பாவிற்கு தெரியவர ஆனால் அவர் கீழே விழுந்து பக்கவாதத்தில் இருக்கிறார். அதனால் அவரால் பேச முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் கோபியை ராதிகா வக்கீல் அலுவலகத்திற்கு செல்ல அங்கே வக்கீல் நோட்டீஸ் ஒன்றை கொடுத்து உங்க மனைவியிடம் கையெழுத்து வாங்கி வர சொல்கிறார். கோபி அதை காட்ட படித்து பார்க்காமல் கையெழுத்து போடுகிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்!
கோபி மீது பாக்கியா இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளதை பார்த்து கோபிக்கு குற்ற உணர்ச்சி வருகிறது. சென்ற வாரம் முழுவதும் இதே கதை மாறி மாறி வந்ததால் இந்த சீரியல் TRPயில் சரிவு ஏற்பட்டது. இதுவரை 10.9 புள்ளிகளுடன் இருக்கும் இந்த சீரியல் கடந்த வாரம் கதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 10.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்து வர வாரங்களில் விறுவிறுப்பு அதிகமாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – 18 மாத DA நிலுவைத் தொகை எப்போது? தொடரும் வலியுறுத்தல்!
ஆனால் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் கோபி மாட்டிக் கொள்ளமாட்டார் என்பதால் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் வர போவதில்லை. அதற்கு பதிலாக எந்த மாதிரி கதை கொண்டு செல்ல போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம். தாத்தாவிற்கு ஒரு கை தான் சரி இல்லாமல் இருப்பதால் மற்றொரு கையால் அவர் எழுதி கூட கோபியை பற்றிய உண்மையை சொல்லலாம் ஆனால் அப்படி இல்லாமல் இருப்பதே சீரியலின் TRP வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.